Sunday 10 June 2012

நீ .....4

எந்த
சந்தோஷங்களையும் கொண்டு
சமன் செய்ய முடியவில்லை
நம் ப்ரியங்கள்
வாழும் இடத்தில்..
நம்
நேற்றைய பொழுதை இன்னும்
கொண்டாடிக்கொண்டு 
நான்
புறையோடி நீர் அருந்த
மறந்து நீ.....


---------------------


அச்சம் தவிர்
என
நீ அறிவுறுத்துகையில்
அறிந்திருக்கவில்லை
நான்
நீ
உன்னை 
தவிர்க்க சொல்லி இருக்கிறாய் என்று.


---------------


விடைபெறுகையில்
நெற்றி
கண்
கன்னம்
இதழ் என
நீ
தந்த முத்தங்களை விட
இனிக்கவில்லை 
கலவி...


---------------