Tuesday 17 July 2012

அவன் வந்த பொழுதுகள்..

இப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் அறிமுகம்
உத்தரவோட உள்ளே வந்தான்!!

அவசர வேலை நிமித்தம்
அங்கிங்கென்று அலைந்துகொண்டிருந்தான்
கூடவே
என்னை அழைத்து வரவேண்டும்
என்ற
கட்டாயமும் அவனுக்கு இருந்தது !!

அப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது!!

அழுக்காய் இருந்தான்
அது அலைச்சலின் நிமித்தமாய் இருக்கலாம்
அழுக்கான பசங்களை பெண்களுக்கு பிடிக்குமாம்
நேற்று குளிக்காத நண்பன் சொன்னான்..

அப்போது
என் கண்களுக்கு அழகாய் இருந்ததன்
காரணம் புரிந்தது!!

விடைபெறும் போது
விழியிடம் ஏதோ கேட்டு
எதையோ தேடி விழியால் ஏதோ சொன்னான்
அப்போதேதும் விளங்கவில்லை!!

வீடு வந்தேன்
விடைகிடைத்தது

எப்படியோ
ஆன ஒரு பொழுதில்
அபகரித்திருந்தான்
“ அவன் “
என்னை!!!

No comments:

Post a Comment