Tuesday 24 July 2012

காலம்!!!

உன்னை
பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று சொல்ல
எதையோ கேட்டவே நினைக்கிறது மனம்
உன் கண்ணீர் கண்டதும் என்னை அணைத்தப்படி
நீங்கிவிடுகிறேன் நீயும் வழிந்த கண்ணீரை துடைக்க
மறந்த படி சென்றுக்கொண்டிருக்கிறாய்
இருப்பினும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நீ கண்ணீருடனும் நான் வெறுங்கையுடனும்
ஒரு நாள் சந்திப்போம் என்று
அன்று அலவளாவிக்கொள்வோம்
நான் தந்து சென்றது நீ கொண்டு சென்றது பற்றியெல்லாம்
அதுவரை நீ சிந்தியபடி இரு கண்ணீரை
நான் எப்படி கேட்பது என்று
கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்னை
அதுவரை வேறு ஒலங்கள் கேட்காதிருக்கட்டும் நமக்கு!!!

No comments:

Post a Comment