Saturday 28 July 2012

பேராசை!!



ஆசைகளை களைய
அனைத்தும் வியப்பாய் இருந்தது
எந்த தேவனிடம் பிரார்த்திக்க
இனி என்னை எந்த பேராசையும் கவ்வக்கூடாதென்று
மனசை கொஞ்சம் கீறி
ரணமாக்கிக்கொண்டேன் வலிக்கிறது
காயத்துக்கு மருந்திடும் எண்ணமில்லை
சற்றே வலிக்கட்டும் இப்போதைக்கு
அதற்குள் ஆசைகளை துறக்கவும் பயின்றுக்கொள்கிறேன்
எனக்கானவை என்பதன் மென் பொருள்
மெல்ல புரிய களைகிறது என் கூரையின் மேல் வானம்
நிர்மூலமாய் வெகு நிர்மூலமாய்
ம்ம்ம்ம்
இனி இதில் சுகம் தேட பழகிக்கொள்ளவேண்டும் என
எண்ணி முடிக்கையில்
ஒரு நாள் தோழி சொன்னது நினைவில் வந்தது
உன்னில் தேடு அன்பை என்று..
எனக்குள் சிரித்துக்கொள்கிறேன் எனக்கும் கேட்கிறது என் சிரிப்பு இப்போது
ஒரு முறை வந்து போனது எனக்குள் சட்டமிடப்பட்ட உன் முகம்!!!